ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது சமீபத்தில் இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது டிசம்பர் 27 ஆம் தேதியை சர்வதேச கொள்ளை நோய்த் தடுப்புத் தயார்நிலை நாளாக அறிவித்துள்ளது.
தகவல் பரிமாற்றம், விஞ்ஞான அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளை உள்நாட்டிலும், பிராந்தியத்திலும், தேசிய அளவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பரப்புவதை இது குறிக்கிறது.
கொள்ளை நோய் என்பது ஒரு நோயானது குறுகிய காலத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக பரவுவதைக் குறிக்கும்.