பீஹாரின் கதிஹார் மாவட்டத்தில் உள்ள கோகபீல் குளம்பு வடிவ ஏரியானது மாநிலத்தின் முதல் சமூகப் பாதுகாப்புச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோகபீல் ஏரியானது வடக்கில் மஹாநந்தா மற்றும் கங்கர் நதிகள் மற்றும் தெற்கு மற்றும் கிழக்கில் கங்கை நதி ஆகியவற்றின் ஓட்டத்தால் உருவாக்கப் பட்டதாகும்.
2004 ஆம் ஆண்டில் இதனுடன் சேர்த்து இதன் அருகில் உள்ள பாகர்பீல் மற்றும் பால்தியா சவுர் ஆகியவற்றிற்கு இந்திய பறவைகள் பாதுகாப்பு அமைப்பால் இந்தியாவின் முக்கியமான பறவைகள் பகுதி எனும் அந்தஸ்து வழங்கப்பட்டது.