TNPSC Thervupettagam

கோக்ரா-வெந்நீர் ஊற்றுப் பகுதி

September 14 , 2022 678 days 343 0
  • கிழக்கு லடாக்கின் கோக்ரா-வெந்நீர் ஊற்றுப் பகுதியில் உள்ள 15வது ரோந்துப் பகுதியில் (PP-15) இருந்து இந்திய மற்றும் சீனப் படைகள் வெளியேறத் தொடங்கி உள்ளன.
  • உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டை முன்னிட்டு இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
  • PP-15 என்பது லடாக்கில் உள்ள 65 ரோந்துப் பகுதிகளில் ஒன்றாகும்.
  • வெந்நீர் ஊற்றுப் பகுதியானது சாங் சென்மோ ஆற்றின் வடக்கே உள்ளதோடு அது கோக்ரா பாதுகாப்பு எல்லைப் பகுதியானது ரோந்துப் பகுதிக்குக் கிழக்கே உள்ளது.
  • இந்தப் பகுதி பாங்கோங் த்சோ ஏரிக்கு வடக்கேயும், கல்வான் பள்ளத்தாக்கின் தென் கிழக்கேயும் அமைந்துள்ள காரகோரம் மலைத்தொடருக்கு வடக்கே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்