TNPSC Thervupettagam

கோடீஸ்வரர்களின் வருடாந்திரச் செல்வ வளம் - ஆக்ஸ்பாம் அறிக்கை

January 29 , 2025 25 days 62 0
  • பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து எடுக்கப்பட்ட செல்வ வளங்களை “Takers, Not Makers” என்று தலைப்பிடப் பட்ட ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • 1765 மற்றும் 1900 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இங்கிலாந்து நாடானது இந்திய நாட்டில் 64.82 டிரில்லியன் டாலர் பணத்தைச் சுரண்டியது என்ற நிலையில் அதில் 33.8 டிரில்லியன் டாலர் முன்னணியில் இருந்த 10% பேருக்கு சென்றது.
  • 1750 ஆம் ஆண்டில், இந்தியாவானது உலகளாவியத் தொழில்துறை உற்பத்தியில் 25% பங்கினைக் கொண்டிருந்தது, ஆனால் 1900 ஆம் ஆண்டில் இது 2% ஆகக் குறைந்தது.
  • ஆனால் 2024 ஆம் ஆண்டில், கோடீஸ்வரர்களின் செல்வ வளம் 2023 ஆம் ஆண்டினை விட மூன்று மடங்கு வேகமாக அதிகரித்தது.
  • 3.5 பில்லியனுக்கும் மிக அதிகமான மக்கள் ஒரு நாளைக்குச் சுமார் 6.85 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வெகு நாட்களாக வாழ்கின்றனர்.
  • பணக்காரர்களில் 1% பேர் தற்போது உலக மக்கள்தொகையில் 95 சதவீதம் பேரை விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்