TNPSC Thervupettagam

கோபாபந்து சம்பதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா

June 7 , 2018 2235 days 681 0
  • ஒடிஸா மாநில அரசானது இதழியலாளர்களுக்காக கோபாபந்து சம்பதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா (Gopabandhu Sambadika Swasthya Bima Yojana) எனும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை துவங்கியுள்ளது.
  • மாநிலத்தின் அனைத்து வேலை செய்யும் இதழியலாளர்களுக்கும் வருடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபாய் சுகாதார காப்பீட்டை வழங்குகின்ற திட்டமாகும்.
  • ஒடிஸாவின் முக்கிய சமூக ஆர்வலர், சீர்திருத்தவாதி, அரசியல் ஆர்வலர், இதழியலாளர், கவிஞர், கட்டுரையாளரான கோபால் பந்து தாஸ் என்பவரின் பெயர் கொண்டு இத்திட்டத்திற்கு கோபாபந்து சம்பதிகா ஸ்வஸ்திய பீமா யோஜனா எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
  • ஒடிஸாவின் கலை, கலாச்சாரம் மற்றும் சமூகத்திற்கு பெரும் பங்களிப்பினை வழங்கியதால் இவர் ஒடிஸாவின் ஆபரணம் (jewel of Odisha) எனப் பொருள்படும் உத்கல்மணி (Utkalmani) எனும் அடைமொழி கொண்டு (epithet) அழைக்கப்படுகின்றார்.
  • 1910-களில் இவர் மக்களுக்கு கல்வியை வழங்குவதற்காக சத்யபாதி (Satyabadi) எனும் மாதாந்திர இலக்கிய இதழை தொடங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்