TNPSC Thervupettagam

கோயம்பத்தூர் இரயில் நிலையம் – பிளாட்டினம் தரநிலை

August 11 , 2021 1109 days 544 0
  • கோயம்பத்தூர் இரயில் நிலையமானது இந்தியப் பசுமை கட்டிடக் கழகத்திடமிருந்து (Indian Green Building Council - IGBC) பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.
  • இந்த நிலையிலான பசுமைச் சான்றிதழைப் பெற்ற தெற்கு இரயில்வேயின் ஒரே இரயில் நிலையமும், 6வது இந்திய இரயில் நிலையமும் இதுவே ஆகும்.
  • கோயம்பத்தூர் தவிர, IGBC அமைப்பின் பிளாட்டினம் தரச் சான்றிதழைப் பெற்றுள்ள மற்ற 5 இரயில் நிலையங்கள் செகந்திராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர், விசாகப் பட்டினம் மற்றும் அசன்சோல் ஆகியனவாகும்.
  • இந்திய இரயில்வேயின் சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் ஆதரவோடுபசுமை இரயில் நிலையத் தரநிலை முறையினை’ IGBC உருவாக்கியது.
  • இது இரயில் நிலையங்கள் பசுமைக் கருப்பொருட்களை ஏற்றுக் கொள்வதை எளிதாக்குவதற்கானதாகும்.
  • நிலையச் செயல்பாடு மற்றும் மேலாண்மை காரணமாக ஏற்படும் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதில் இது உதவும் 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்