கடற்படையின் ‘சாகர் பரிக்ரமா’வின் ஒரு பகுதியாக, தனி நபராக பிறர் உதவியின்றி உலகைச் சுற்றி வருவதற்கான மகளிருக்கான முதல் பந்தயத்தில் பங்கேற்க 2 பெண் கடற்படை அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இது கடற்படையினால் நடத்தப்படும் இத்தகைய நான்காவது பந்தயமாகும்.
இந்தப் பயணத்தில், ஒரு பெண் கடற்படை அதிகாரி தனியாகவும், நிறுத்தம் இன்றியும் உலகம் முழுவதும் பயணம் செய்வார்.
துணை நிலை படைத் தளபதி தில்னா. K மற்றும் துணை நிலை படைத் தளபதி ரூபா அழகிரி சாமி ஆகிய இரு அதிகாரிகள் இதற்கானப் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப் பட்டனர்.