39 வயதான அலெஸாண்ட்ரா கோரப் முண்டுருகு என்பவருக்கு இந்த ஆண்டிற்கான கோல்ட்மேன் (தங்க மகன்) பரிசு வழங்கப் பட்டுள்ளது.
இந்தப் பரிசு அடித்தளச் சமூக ஆர்வல இயக்கத்தினை அங்கீகரிக்கிறது.
பிரேசிலின் பழங்குடியினமான முண்டுருகு என்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்த இந்தத் தலைவருக்கு அங்குள்ள அமேசான் மழைக்காடுகளில் சுரங்கப் பணிகள் மேற் கொள்வதற்கு எதிராக மேற்கொண்ட வெற்றிகரமான போராட்டத்தினை அங்கீகரித்து இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
இவ்வருடம் கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு பெற்ற மற்ற நபர்கள்:
பின்லாந்தைச் சேர்ந்த டெரோ மஸ்டோனென்,
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த படாக் இனப் பெண் டெலிமா சிலாலாஹி
ஜாம்பியாவின் சமூக ஆர்வலர் சிலேக்வா மும்பா
துருக்கியைச் சேர்ந்த ஜாஃபர் கிசில்காயா
அமெரிக்க இறால் படகுப் பிரிவுத் தலைவர் டயான் வில்சன்.