TNPSC Thervupettagam

கோவா விடுதலை தினம் – டிசம்பர் 19

December 20 , 2018 2109 days 564 0
  • கோவா விடுதலை தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 19 அன்று கீழ்க்காண்பனவற்றின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. அவையாவன
    • 450 ஆண்டுகால போர்த்துக்கீசியரின் காலனியாதிக்க ஆட்சியில் இருந்து கோவா விடுதலை பெற்றதைக் கொண்டாடுதல்.
    • 19 டிசம்பர் 1961 அன்று நடைபெற்ற விஜய் நடவடிக்கையின் போது உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துதல்.
  • 1987ஆம் ஆண்டு தனி மாநில அங்கீகாரம் வழங்கப்பட்ட கோவா மாநிலமானது செழிப்பான மாநிலமாகவும், இந்தியாவில் அதிக தனிநபர் வருமானம் கொண்ட ஒரு மாநிலமாகவும் விளங்கி வருகின்றது.
  • இவ்வருடம் கோவா விடுதலை தினத்தின் 57 வது ஆண்டு ஆகும்.
  • போர்த்துக்கீசிய ஆட்சியில் இருந்து அஞ்சாதிவ் தீவு மற்றும் கோவாவின் டாமன் மற்றும் டையூ ஆகியவற்றின் விடுதலைக்காக இந்தியக் கடற்படையினரால் 1961 டிசம்பர் 19 ஆம் தேதி " விஜய் நடவடிக்கை" மேற்கொள்ளப்பட்டது.
  • பதவியில் இருந்து அகற்றப்பட்ட போர்ச்சுகல்லின் கவர்னர் ஜெனரல் மானுவல் அன்டோனியோ வஸ்ஸலோ இ ஸில்வா இந்தியாவில் அப்போதைய இராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிரன் நாத் தாபரிடம் சரணடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்