கோவிட் – 19 தொற்றிற்காக நாசி வழியாக செலுத்தப்படும் அரைத் திண்மக் கரைசல் (Gel)
April 11 , 2020 1564 days 482 0
உயிரி அறிவியல் & உயிரிப் பொறியியல் துறை மற்றும் மதராசில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து நாசி வழியாக செலுத்தப் படும் அரைத் திண்மக் கரைசலை உருவாக்கியுள்ளன. இது கோவிட் – 19 வைரசை செயலிழக்கச் செய்கின்றன.
இந்தத் தொழில்நுட்பத்திற்கான நிதியுதவியானது மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பான அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தினால் (SERB - Science and Engineering Research Board) வழங்கப் படுகின்றது.
இந்த ஒற்றை அணுகுமுறையின் கீழ், ஓர் உயிரணுவிலிருந்து மற்றொரு உயிரணுவிற்கு இந்த வைரஸ் செல்வதைத் தடுப்பதற்காக ஒரு காரணச் செயல்பாடு கொண்ட ஒரு கூறானது உருவாக்கப் படுகின்றது.
மற்றொரு அணுகுமுறை வைரஸ்களைப் பிடித்து வைத்துக் கொள்வதன் மூலம் வைரஸ்களை செயலிழக்கச் செய்வதாகும்.