2019 ஆம் ஆண்டின் கௌசலாச்சார்யா விருதுகளை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த விருதானது எதிர்காலத்தில் தயாராக இருக்கக் கூடிய மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் தனித்துவப் பங்களிப்புகளை ஆற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களைப் பாராட்டுவதற்காக வழங்கப் படுகின்றது.
தொழில் பயிற்சி சூழல் அமைப்பில் திறன் பயிற்சியாளர்கள் அளித்த பங்களிப்பை இது அங்கீகரிக்கின்றது.
உலகத் திறன் போட்டியின் வெற்றியாளர்கள், தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களின் (National Skill Training Institutes - NSTIs) பயிற்சியாளர்கள், தொழில் துறை பயிற்சி மையங்கள் (Industrial Training Centres - ITI) ஜன் சிக்சன் சன்ஸ்தன்ஸ் மற்றும் பெருநிறுவனங்களின் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.