கர்நாடக அரசானது க்ருஹ லட்சுமி திட்டம் எனப்படும் பெண்களுக்கான சமூக நலத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், அரசானது ஒரு குடும்பத் தலைவிக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்க உள்ளது.
அந்தியோதயா என்ற திட்டத்தில் குடும்பத் தலைவர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ள பெண்கள், வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள மற்றும் வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்தின் பயனாளியாக இருக்க முடியும்.