TNPSC Thervupettagam

சக்கர அச்சு கணக்கீட்டு அமைப்பு மூலம் இரயில் தண்டவாள இருப்பு குறித்த அறிவிப்பு

November 4 , 2023 260 days 166 0
  • மத்திய இரயில்வே நிர்வாகமானது, மும்பை கோட்டத்தின் வாசிந்த்-அசங்கன் பிரிவில் சக்கர அச்சு கணக்கீட்டு அமைப்பு (BPAC) மூலம் இரயில் தண்டவாள இருப்பு குறித்த அறிவிப்பினை வழங்கும் அமைப்பை நிறுவி இயக்கியுள்ளது.
  • இரயில் இயக்கங்களின் உச்சகட்ட பாதுகாப்பினை பேணுவதில் BPAC அமைப்பு ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • குறிப்பாக, இது ஒரு பிரிவின் பாதையில் பயணிக்கும் முந்தைய வாகனத்தை கவனமாக ஆராய்ந்து, மற்றொரு இரயில் அந்தப் பாதையில் நுழைவதற்கான அனுமதியினை வழங்குவதற்கு முன், அந்தப் பாதையில் எந்தவொரு இரயிலும் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
  • முன்னதாக, BPAC அமைப்பு ஆனது கல்யாண்-இகத்புரி பிரிவில் உள்ள வாஷிந்த் இரயில் நிலையம் வரை பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்