சங்கீத நாடக நிறுவனம் 2018 ஆம் ஆண்டிற்கான பின்வரும் மூன்று பிரிவுகளில் விருதுகளை அறிவித்துள்ளது.
சங்கீத நாடக நிறுவனத்தின் தோழமை விருதுகள்
இது உயரிய மற்றும் அரிதான ஒரு கௌரவ விருதாகும். எப்போதும் இந்த விருதைப் பெறும் நபர்களின் எண்ணிக்கை 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் ஹுசைன் (தபேலா கலைஞர்)
சோனல் மான்சிங் (நடனக் கலைஞர்)
ஜதீன் கோஸ்வாமி (பயிற்சியாளர்)
கல்யாண சுந்தரம் பிள்ளை (பரத நாட்டியக் கலைஞர்)
சங்கீத நாடக நிறுவன விருதுகள் (அகாடமி புரஸ்கர்)
நிகழ்த்துக் கலைகள் பிரிவில் இசை, நடனம், நாடகம், பாரம்பரியம், நாட்டார்/ பழங்குடியின இசை ஆகிய துறைகளில் 44 கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த விருது கலைகளில் நீடித்து விளங்கும் தனிநபரின் பணி மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக 1952 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது.
இந்த விருதுகள் இந்தியக் குடியரசுத் தலைவரால் விருது வழங்குவதற்கான சிறப்பு விழாவின் போது வழங்கப்படவிருக்கின்றன.
2018 ஆம் ஆண்டில் விருது பெற்றவர்கள் : பரத நாட்டியத்திற்காக ராதா ஸ்ரீதர், மணிப்பூரி நடனத்திற்காக அஹம் லட்சுமி தேவி, நாடக ஆசிரியருக்காக ராஜீவ் நாயக் மற்றும் நாட்டுப்புற இசைக்காக மாலினி அவாஸ்தி.
உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான் யுவ புரஸ்கர்ஸ்
நிகழ்த்துக் கலையில், அவரவருடைய துறையில் சிறந்து விளங்கும் இளம் திறமையாளர்களைக் கௌரவிப்பதற்காக 40 வயதிற்குக் கீழுள்ள 32 இளம் கலைஞர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சங்கீத நாடக நிறுவனத்தின் தலைவர் இந்த விருதுகளை வழங்குகின்றார்.