இந்தியக் கடலோரக் காவல்படையானது சமீபத்தில் 'சஜாக் நடவடிக்கையினை' மேற் கொண்டது.
இது இந்தியக் கடலோரக் காவல்படையினால் மேற்குக் கடற்கரையில் நடத்தப்படும் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியாகும்.
கடலோரப் பாதுகாப்பு நெறிமுறையை மறுசீரமைப்பதற்கும், கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
இந்தப் பயிற்சியின் போது, கடலில் உள்ள அனைத்து மீன்பிடி படகுகள், விசைப் படகுகள் மற்றும் கப்பல்களின் ஆவணங்கள் மற்றும் பணியாளர் அனுமதிச் சீட்டுகளின் விரிவான சோதனை மற்றும் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப் பட்டது.