கர்நாடக சட்டமன்ற சபாநாயகரான K.R. ரமேஷ்குமார் தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக் காலம் (2023) முடியும் வரை இடைத் தேர்தல்களில் போட்டியிட தடை விதித்து 14 அதிருப்தி உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தார்.
இவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் 13 பேரையும், JDS கட்சி உறுப்பினர்கள் மூவரையும் சுயேட்சை உறுப்பினர் ஒருவரையும் என ஒட்டு மொத்தமாக 17 பேரைத் தகுதி நீக்கம் செய்தார்.
இதனால் 225 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 208 ஆக குறைந்துள்ளது. எனவே பெரும்பான்மைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.
இந்த 17 உறுப்பினர்கள் இடைத் தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் புதிய கர்நாடக முதல்வர் தனது அமைச்சரவையில் இந்த அதிருப்தி உறுப்பினர்களுக்கு இடமளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.