மேற்கு வங்க சட்டமன்ற கீழவையானது சட்டமன்ற மேலவையை அமைப்பதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அரசியலமைப்பின் 169வது சட்டப் பிரிவின் கீழ் ஒரு சட்டத்தின் மூலம் ஒரு மாநிலத்தில் இரண்டாம் சட்டமன்ற அவையினை உருவாக்குவதற்கும் (அ) நீக்குவதற்கும் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
இதற்காக அம்மாநிலத்தின் சட்டமன்ற கீழவையானது ஒரு தீர்மானத்தை சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.
இந்திய அரசியலமைப்பின் 171வது சட்டப் பிரிவின் படி ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையானது அந்த மாநிலத்தின் சட்டமன்ற கீழவையின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கக் கூடாது.
மேலும் அந்த மாநிலத்தின் சட்டமன்ற மேலவையினுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 40க்கு குறைவாகவும் இருக்கக் கூடாது.