TNPSC Thervupettagam

சண்டிகர் மேயர் தேர்தல்

February 23 , 2024 147 days 167 0
  • சண்டிகர் மேயர் தேர்தல் முடிவை உச் சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • இதில் தலைமை தேர்தல் அதிகாரி அனில் மசிஹ், அளிக்கப்பட எட்டு வாக்குகளை வேண்டுமென்றே செல்லாததாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
  • நீதிமன்றம் ஆனது அரசியலமைப்பின் 142வது சட்டப் பிரிவின் கீழ், "முழுமையான நீதியை" வழங்குவதற்காகவும் தேர்தல் ஜனநாயகத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதற்காகவும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது.
  • மாநகராட்சி அமைப்பு ஐந்தாண்டு பதவிக் காலத்தினைக் கொண்டிருந்தாலும், இங்கு மேயர் ஓராண்டிற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • இந்த மாநகராட்சி அமைப்பின் பதவிக் காலத்தின் முதல் மற்றும் நான்காம் ஆண்டில் ஒரு பெண் வேட்பாளருக்காக அந்த இடம் ஒதுக்கப்படுகிறது.
  • இந்த மாநகராட்சிக்கான தேர்தல் ஆனது கடைசியாக 2021 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்