TNPSC Thervupettagam

சதுரங்க ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா

July 30 , 2022 723 days 487 0
  • சென்னையில் நடைபெறுகின்ற 44வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவில் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • இதில் அதிக எண்ணிக்கையிலான நாடுகள், அதிக எண்ணிக்கையிலான அணிகள் மற்றும் பெண் சதுரங்க வீராங்கனைகளின் அதிக அளவிலானப் பங்கேற்பு என இது பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
  • முதலில் இந்த ஒலிம்பியாட் போட்டியானது ரஷ்யாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
  • ஆனால் ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.
  • இதில் கலந்து கொள்கின்ற 73 இந்தியக் கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இந்த ஒலிம்பியாட்டின் வேஷ்டி அணிந்தச் சின்னமான தம்பி சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்