பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சந்திராணி முர்மு என்ற பெண்மணி மக்களவைத் தேர்தலில் ஒடிசாவின் கியோன்ஜ்ஹார் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் 25 ஆண்டுகள் 11 மாதங்கள் மட்டுமே நிரம்பிய நாடாளுமன்றத்தின் மிக இளைய வயது உறுப்பினராக உருவெடுத்துள்ளார்.
இவர் கியோன்ஜ்ஹார் தொகுதியில் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்த பிஜேபியைச் சேர்ந்த அனந்தநாயக் என்பவரை 67,822 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதற்கு முன்பு ஹரியானாவின் ஹிசார் தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட துஷ்யந்த் சவுதலா என்பவர் மிக இளைய வயது நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். இவர் தனது 26-வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.