TNPSC Thervupettagam

சம இரவு – பகல் புவி தினம் – மார்ச் 20

March 22 , 2020 1651 days 382 0
  • உலக புவி தினத்தைப் போன்றே புவியைப் பாதுகாப்பதற்காக மனிதர்களால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை அனுசரிப்பதற்காகவும் சிறந்த காலநிலைக்காக சிறந்த உத்திகளை வகுப்பதற்காகவும் சம இரவு-பகல் புவி தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் சம இரவு-பகல் புவி தினமானது வசந்த கால சம இரவு-பகல் தினத்தன்று (இந்த ஆண்டு மார்ச் 20ஆம் தேதி) அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்தத் தினமானது வட அரைக் கோளத்தில் வசந்த காலத்தின் முதலாவது தினத்தையும் தென் அரைக்கோளத்தில் இலையுதிர்க் காலத்தின் முதலாவது தினத்தையும் குறிக்கின்றது.
  • இத்தின அனுசரிப்பானது முதலாவது சம இரவு-பகல் புவி தினம் மற்றும் முதலாவது புவி தினம் அனுசரிக்கப்பட்ட 1970ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதியிலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • மேலும் இத்தினமானது “இரவும் பகலும் சமமான புவி தினம்” என்றும் அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்