TNPSC Thervupettagam

சமூக ஊடக பணம் செலுத்து அமைப்பு

April 21 , 2018 2266 days 720 0
  • தொகுக்கப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி மின்னஞ்சல் (E-mail), கட்செவி அஞ்சல் (Whats App) போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிலிருக்கும் பயனாளர்களுக்கு பணம் அனுப்ப வெளிநாடுவாழ் இந்தியர்களை இயலச் செய்கிறது.
  • சமூக ஊடக பணம் செலுத்து அமைப்பு எனப் பெயரிடப்பட்டுள்ள இது, இந்தியாவிலுள்ள எந்தவொரு வங்கியாலும் எடுக்கப்படாத முதல் முயற்சியாகும். பணம் அனுப்பப் பயன்படும் இவ்வங்கியின் செயலியான Money 2 India வில் இவ்வசதி உள்ளது.
  • ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆனது, எல்லை தாண்டிய சமூக ஊடகங்கள் வழியான பணம் அனுப்பும் வசதியை அனுமதிக்கும் சேவையைத் தொடங்கிய இந்தியாவின் முதல் வங்கியாகவும் உலகளவில் இச்சேவையை ஆரம்பித்த ஒரு சில நாடுகளின் வங்கிகளுள் ஒன்றாகவும்  இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்