சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதுகள்
November 6 , 2019
1727 days
703
- இந்த ஆண்டில் இந்த விருதைப் பெற்றவர்கள் பின்வருமாறு
- யாசிதிக்களின் மீட்பிற்கான அலுவலகத்தின் இயக்குனர் ஹுசைன் அல்-கைதி
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் நிறுவனருமான கைலாஷ் சத்தியார்த்தி,
- பிருதி பட்கர் – பிரேரணா என்ற அமைப்பின் நிறுவனர்
- ஹசினா கர்பிஹ் - இம்பல்ஸ் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர்
- இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டுச் செயல்படும் வார் சைல்ட் என்ற அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராப் வில்லியம்ஸ்,
- திரைப்பட இயக்குனர் ராபர்ட் பில்ஹைமர்,
- டாக்டர் கிரண் கமல் பிரசாத் - ஜீவிகா என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர்,
- கட்டாய உறுப்புத் திருட்டிற்கு எதிரான மருத்துவர்கள் என்ற அமைப்பின் நிறுவனர் டாக்டர் டார்ஸ்டன் ட்ரே,
- அர்பன் லைட் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனரான அலெக்ஸாண்ட்ரா ரஸ்ஸல்
- சிறுவர்கள் பாலியல் வர்த்தகத்திற்கு எதிராக செயல்படும் சமூக ஆர்வலர் அஜீத் சிங்,
- காங்கோவின் முன்னாள் சிறுவர் படைவீரரான ஜிதா சுவாமி
- ஈவ்லியன் ஹோல்ஸ்கென் – “பிரி எ கேர்ள்” என்ற அமைப்பின் நிறுவனர்.
இந்த விருது பற்றி
- அன்னை தெரசா விருதுகளானது 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறுமோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ வழங்கப் படுகின்றன.
- இது மும்பையில் ஆபிரகாம் மாத்தாய் என்பவரால் உருவாக்கப்பட்ட ஹார்மனி அமைப்பின் ஒரு முன்முயற்சியாகும்.
- சமயப் பரப்புக் குழுவினரின் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்ட அன்னை தெரசா பெயரில் உள்ள ஒரே விருது இதுவேயாகும்.
Post Views:
703