TNPSC Thervupettagam

சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதுகள்

November 6 , 2019 1727 days 703 0
  • இந்த ஆண்டில் இந்த விருதைப் பெற்றவர்கள் பின்வருமாறு
    • யாசிதிக்களின் மீட்பிற்கான அலுவலகத்தின் இயக்குனர் ஹுசைன் அல்-கைதி
    • அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் பச்பன் பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் நிறுவனருமான கைலாஷ் சத்தியார்த்தி,
    • பிருதி பட்கர் – பிரேரணா என்ற அமைப்பின் நிறுவனர்
    • ஹசினா கர்பிஹ் - இம்பல்ஸ் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனர்
    • இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டுச்  செயல்படும் வார் சைல்ட்  என்ற அறக்கட்டளை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராப் வில்லியம்ஸ்,
    • திரைப்பட இயக்குனர் ராபர்ட் பில்ஹைமர்,
    • டாக்டர் கிரண் கமல் பிரசாத் - ஜீவிகா என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர்,
    • கட்டாய உறுப்புத்  திருட்டிற்கு எதிரான மருத்துவர்கள் என்ற அமைப்பின்  நிறுவனர் டாக்டர் டார்ஸ்டன் ட்ரே,
    • அர்பன் லைட் என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் நிறுவனரான அலெக்ஸாண்ட்ரா ரஸ்ஸல்
    • சிறுவர்கள் பாலியல் வர்த்தகத்திற்கு எதிராக செயல்படும் சமூக ஆர்வலர் அஜீத் சிங்,
    • காங்கோவின் முன்னாள் சிறுவர் படைவீரரான ஜிதா சுவாமி
    • ஈவ்லியன் ஹோல்ஸ்கென் – “பிரி எ கேர்ள்” என்ற அமைப்பின் நிறுவனர்.
இந்த விருது பற்றி
  • அன்னை தெரசா விருதுகளானது 2004 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறுமோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையோ வழங்கப் படுகின்றன.
  • இது மும்பையில் ஆபிரகாம் மாத்தாய் என்பவரால் உருவாக்கப்பட்ட ஹார்மனி அமைப்பின் ஒரு முன்முயற்சியாகும்.
  • சமயப் பரப்புக் குழுவினரின் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்ட அன்னை தெரசா பெயரில் உள்ள ஒரே விருது இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்