தேசியப் பூங்காவிற்குள் சமூக வன வள உரிமைகளை (CFR) அங்கீகரித்த இரண்டாவது மாநிலமாக சத்தீஸ்கர் மாறி உள்ளது.
பஸ்தர் மாவட்டத்தில் உள்ள கங்கேர்காட்டி தேசியப் பூங்காவில் அமைந்துள்ள குடியாபதார் மற்றும் நாகல்சர் கிராமங்களின் சமூக வன வள உரிமை கோரல்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசியப் பூங்காவில் சமூக வன வள உரிமைகளை (CFR) அங்கீகரித்த முதல் மாநிலம் ஒடிசா ஆகும்.
இது வனவாசிகளுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் மற்றும் வன நிர்வாகத்தின் மீதான அதிகாரம் ஆகியவற்றினை அளிக்கிறது.