சம்மக்கா சரலம்மா ஜடாரா திருவிழாவானது தெலுங்கானா மாநிலத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இது மேடாரம் ஜடாரா என்றும் அழைக்கப்படுகின்றது.
இது தெலுங்கானா மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒரு பழங்குடியினர் திருவிழாவாகும்.
இது தெலுங்கானாவின் மாநிலத் விழாவாகும்.
நியாயமற்ற சட்டத்திற்கு எதிராக ஆளும் ஆட்சியாளர்களுடன் நிகழ்த்திய தாய் மற்றும் மகளான சம்மக்கா மற்றும் சரலம்மாவின் சண்டையை இந்தத் திருவிழா நினைவு கூர்கின்றது.
நாட்டில் கும்ப மேளாவிற்குப் பிறகு, மேடாரம் ஜடாரா ஆனது அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை ஈர்க்கின்றது என்று நம்பப் படுகின்றது.