2017 ஆம் ஆண்டு ஜூன் 30 மற்றும் ஜூலை 01 ஆகிய தினங்களுக்கு இடைப்பட்ட இரவில் நாடாளுமன்றத்தின் மத்திய மன்றத்தில் நடைபெற்ற விழாவில் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய வரி விதிப்பு நடைமுறைப் படுத்தப்பட்ட ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று இத்தினமானது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
இது "ஒரு நாடு-ஒரு சந்தை-ஒரு வரி" என்ற ஒரு கருத்தாக்கத்துடன் அறிமுகப் படுத்தப் பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி என்பது ஒரு மறைமுக, பல கட்ட, நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாகும்.
இருப்பினும், பெட்ரோலியம், மதுபானம், முத்திரைத் தாள் வரி உள்ளிட்டவை சரக்கு மற்றும் சேவை வரியில் சேர்க்கப்படவில்லை.
இந்தப் பொருட்கள் மீது பழைய வரி முறையைப் பயன்படுத்தப்படுகின்றன.