TNPSC Thervupettagam

சரத்து 162ன் கீழ் நிர்வாக வழி உத்தரவு

October 31 , 2020 1359 days 789 0
  • ஒரு அரிய நடவடிக்கையாக, தமிழக அரசானது ஒரு அரசாங்க உத்தரவை (Government Order) ஒரு நிர்வாக வழி  உத்தரவாக பிறப்பித்துள்ளது.
  • இளங்கலை மருத்துவப் படிப்பிற்கானச் சேர்க்கைகளில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாநில அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இது 7.5% என்ற அளவில் கிடைமட்ட இட ஒதுக்கீட்டை அளிக்கிறது.
  • 2020-2021 கல்வியாண்டில் இருந்து 69% இடஒதுக்கீட்டிற்குள் தமிழக மாநிலத்தில் பின்பற்றப்படும் செங்குத்து இடஒதுக்கீட்டின் ஒவ்வொரு பிரிவிலும் மேற்கண்ட கிடைமட்ட இட ஒதுக்கீடு வழங்கப் படும்.
  • மாநில அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும்.
  • எனினும் இந்த ஒதுக்கீட்டிற்கான மசோதா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் முன்பு அவரது ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்தது.
  • இந்த மசோதா செப்டம்பர் 15 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
  • எனினும் மாநில அரசாங்கத்தால் அரசாங்க உத்தரவு வழங்கப்பட்ட பின்னர் ஆளுநர் அந்த மசோதாவுக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
  • 162வது சரத்தின் கீழ், ஆளுநரின் முடிவு ஒரு விவகாரத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் நிர்வாக அதிகாரமானது சட்டமன்ற அதிகாரத்துடன் இணைந்துச் செயல்படுவதாக மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
  • அரசாங்க ஒதுக்கீடானது அரசியலமைப்பின் 14 மற்றும் 15வது சரத்துகளை மீறவில்லை என்று மாநில அரசானது தனது அரசாங்க உத்தரவில் கூறி உள்ளது.
  • ஓய்வு பெற்ற மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் அவர்களின் தலைமையிலான ஒரு குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீட்டு முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்