தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி அவர்களுக்கு சூர்ய வம்சம் என்ற நினைவுப் புத்தகத்திற்காக 2022 ஆம் ஆண்டு ‘சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கப் பட்டுள்ளது.
இந்த விருதானது K.K. பிர்லா அறக்கட்டளையினால் நிறுவப் பட்டது.
இவர் 36 புதினங்கள், 48 குறு புதினங்கள், 150 சிறுகதைகள், ஐந்து பயணக் கட்டுரைகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் மூன்று சுயசரிதைகளை எழுதியுள்ளார்.
சரஸ்வதி சம்மான் விருதானது, ஆண்டுதோறும் வழங்கப்படும் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் சேர்க்கப் பட்டுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்றில் வெளியிடப்பட்ட இந்தியக் குடிமகனின் சிறந்தவொரு இலக்கியப் படைப்பிற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.