TNPSC Thervupettagam

சர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 21

September 23 , 2019 1833 days 669 0
  • சில நேரங்களில் அதிகாரப் பூர்வமற்ற முறையில் உலக அமைதி தினம் என்று அழைக்கப்படுகின்ற சர்வதேச அமைதி தினமானது ஆண்டுதோறும் செப்டம்பர் 21 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • 1981 ஆம் ஆண்டில் அமைதிக் கலாச்சாரம் குறித்த ஐ.நா. தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் இத்தினமானது நிறுவப்பட்டது.
  • இந்த தினத்தை அனுசரிப்பதற்காக ஐ.நா. அமைதி மணி ஐ.நா.வின் தலைமையகத்தில் (நியூயார்க் நகரில்) ஒலிக்கின்றது.
  • ஐக்கிய நாடுகள் சபையானது 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துருவாக “அமைதிக்காக காலநிலை நடவடிக்கை” என்பதினை அறிவித்துள்ளது.
  • இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் ஒப்பீட்டளவில் தனித்துவமானது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையின் இந்த ஆண்டு கருத்துருவானது போர், மோதல் அல்லது அமைதி ஆகியவற்றிற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்