2019 ஆம் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் விருதை கென்யாவைச் சேர்ந்த கிராமப்புற அறிவியல் ஆசிரியரான பீட்டர் தபீச்சி என்பவர் வென்றுள்ளார்.
1 மில்லியன் மதிப்புள்ள இவ்விருதை வென்ற ஆப்பிரிக்காவின் முதலாவது ஆசிரியர் இவராவார்.
இந்த விருதானது ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர் மற்றும் துபாயின் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தோம் என்பவரின் ஆதரவுடன் வர்க்கே அறக்கட்டளையால் வழங்கப்படுகின்றது.
இந்த விருதானது கல்வியின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்தவர்களையும் தனது பணிகளில் தனித்துவமாக விளங்கும் ஆசிரியர்களை அங்கீகரிப்பததையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.