ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதலையும், அதை எதிர்த்துப் போராடுதல் மற்றும் அதைத் தடுத்தல் ஆகியவற்றில் உடன்படிக்கையின் பங்கு பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையினை ஏற்றுக் கொண்டது.
இந்த ஆண்டு, ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையின் (UNCAC) இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையின் 20வது ஆண்டு நிறைவு: ஊழலுக்கு எதிராக உலக நாடுகளை ஒன்றிணைத்தல்” என்பதாகும்.