TNPSC Thervupettagam

சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் கூட்டம் 2024

February 20 , 2024 150 days 286 0
  • சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) உறுப்பினர் நாடுகள் ஆனது, அமைப்பின் முழு உறுப்பினராக ஆவதற்காக இந்திய அரசினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீதான விவாதங்களைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
  • இந்திய நாடானது 2017 ஆம் ஆண்டில் சர்வதேச எரிசக்தி முகமையில் ஒரு இணை உறுப்பினராக சேர்ந்ததோடு, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் முழு உறுப்பினருக்கான முறையான கோரிக்கையையும் அனுப்பியது.
  • சர்வதேச எரிசக்தி முகமை என்பது 31 தொழில்மயமான நாடுகளை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
  • சிலி, கொலம்பியா, இஸ்ரேல் மற்றும் லிதுவேனியா ஆகிய நான்கு நாடுகள் இதில் முழு உறுப்பினராக சேர முயன்று வருகின்றன.
  • 31 உறுப்பினர் நாடுகளும் 13 இணை உறுப்பினர் நாடுகளும் உலகளாவிய எரிசக்தித் தேவையில் 75% பங்கினைக் கொண்டுள்ளன.
  • ஒரு நாடு IEA அமைப்பில் முழு உறுப்பினராக ஆவதற்கு, அந்நாடு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) உறுப்பினர் நாடாக இருக்க வேண்டும்.
  • உறுப்பினர் நாடுகள் முந்தைய ஆண்டின் நிகர இறக்குமதியின் 90 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்குச் சமமான கச்சா எண்ணெய் மற்றும்/அல்லது விளைபொருள் இருப்புக்களை (மூலோபாய எண்ணெய் இருப்புக்கள்) வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறையை IEA விதிக்கிறது.
  • இந்தியாவின் தற்போதைய மூலோபாய எண்ணெய் இருப்பு ஆனது, அதன் தேவையில் 9.5 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே உள்ளது.
  • மேலும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் உள்ள சேமிப்புடன், 66 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு என்று சமமான ஒரு கையிருப்பைக் கொண்டுள்ளது.
  • IEA அமைப்பின் உறுப்பினர் நாடுகள் குறிப்பிடத் தக்க உலகளாவிய எண்ணெய் விநியோக சீர்குலைவுக்கான அவசரகால எதிர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கச் செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்