TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 08

September 10 , 2023 347 days 203 0
  • முதலாவது உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களின் மாநாடானது 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 08 ஆம் தேதியன்று ஈரானின் டெஹ்ரானில் நடைபெற்றது.
  • கல்வித் திட்டங்கள் குறித்த சர்வதேச விவாதத்திற்காகப் பிரத்தியேகமாக நடத்தப்பட்ட முதல் கூட்டத்தைக் குறிக்கும் வகையில் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற 14வது யுனெஸ்கோ பொது மாநாட்டின் போது இந்தத் தினத்தின் அனுசரிப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.
  • தனிமனித மேம்பாடு, எழுத்தறிவு, சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
  • உலகெங்கிலும் சுமார் 775 மில்லியன் மக்கள் அடிப்படைக் கல்வியறிவுத் திறன்கள் இல்லாமல் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்