TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8

September 8 , 2017 2539 days 1730 0
  • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8ம் தேதி சர்வதேச எழுத்தறிவு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1966ல் தன்னுடைய 14வது கூட்டத்தில் யுனெஸ்கோ செப்டம்பர் 8ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.
  • இந்த தினத்தை அனுசரிப்பதன் முக்கிய அம்சமானது. எழுத்தறிவின்மைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக மக்களின் கருத்துக்களை ஒருங்கிணைப்பதாகும்.
  • சர்வதேச எழுத்தறிவு தினம் என்பது எழுத்தறிவைப் பற்றிய தகவல்களை பரப்புவதற்கும், பொதுமக்களிடம் எழுத்தறிவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தனிநபருக்கும் தேசிய வளர்ச்சிக்கும் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கும் பயன்படும் ஒரு மேடையாகும்.
  • 2017ம் ஆண்டுக்கான கருத்துரு: எண்ம (Digital) உலகில் எழுத்தறிவு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்