உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 23ஆம் தேதி சர்வதேச கைம்பெண்கள் தினம் (WIDOW DAY) கடைப்பிடிக்கப்படுகின்றது.
தங்களுடைய துணைவனின் இறப்பினைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கைம்பெண்கள் அடையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2010ஆம் ஆண்டு ஐ.நா.அவையால் இத்தினம் துவங்கப்பட்டது.
நீண்ட காலமாக சமூக புறக்கணிப்போடு புலப்படா அந்தஸ்தோடு உலகில் வாழ்ந்து வருகின்ற கைம்பெண்களுக்கு சமூகத்தில் முழு உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை வழங்குவதையும், அடைவதையும் உறுதி செய்யும் செயல்களுக்கான ஓர் வாய்ப்பே இத்தினமாகும்.