சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட பன்னாட்டு முதலீட்டு வங்கியான கிரெடிட் சூயிஸ் குழுமம் தனது வருடாந்திர உலகளாவிய செல்வ அறிக்கையின் 10வது பதிப்பை வெளியிட்டுள்ளது.
ஒரு நபரின் "நிகர மதிப்பு" என்ற அடிப்படையில் செல்வம் வரையறுக்கப் படுகிறது.
நிகர மதிப்பு என்பது ஒரு நபரின் கடன்களைக் கழித்து அவரின் நிதிச் சொத்துக்கள் மற்றும் உண்மையான சொத்துக்களின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலம் பெறப் படுகிறது.
முக்கியப் புள்ளி விவரங்கள்
இந்த ஆண்டு அமெரிக்காவை முந்திக் கொண்டு சீனா “உலக செல்வ விநியோகத்தில் முதல் 10% இடங்களில் அதிகமான மக்களைக் கொண்ட நாடு” என மாறியுள்ளது.
உலகின் செல்வத்தில் பாதியான 44% அளவினை (158.3 டிரில்லியன் டாலர் மதிப்பு) 47 மில்லியன் மக்கள் மட்டுமே வைத்திருக்கிறார்கள்.
சதவீதத்தைப் பொறுத்தவரை 0.9% மக்கள் உலகின் செல்வத்தில் 44% அளவினை வைத்திருக்கிறார்கள்.
உலக செல்வத்தில் 82% அளவினை 10% அளவிலான பணக்காரர்கள் கொண்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மொத்த உலகளாவிய செல்வத்தில் 1% அளவிற்கும் குறைவாகவே செல்வந்தர் வரிசையில் இருக்கும் கடைசி பாதி அடுக்கு மக்கள் கொண்டு இருக்கின்றனர்.
இந்தியாவைப் பற்றிய தரவு
அதிஉயர் நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மொத்த செல்வம் 2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் நான்கு மடங்கு அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 12.6 டிரில்லியன் டாலர் என்ற மதிப்பினை எட்டியது.
இந்தியாவில் வயதில் பெரியவர்கள் 4,460 என்ற அளவில் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களையும், 1,790 என்ற அளவில் 100 மில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துக்களையும் கொண்டுள்ளனர்.
உலக செல்வந்தர்களில் முதல் 1% பேரில் இந்தியாவில் 8.27 லட்சம் என்ற அளவில் வயதில் பெரியவர்கள் உள்ளனர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா தனது செல்வத்தை மிக வேகமாக அதிகரித்து 4.4 டிரில்லியன் டாலர்களைச் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.