கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோரான சங்கீதா அபயன் உலகப் பெண் தொழில்முனைவோர் விருதினை வென்றுள்ளார்.
இது ஜுனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ஹாங்காங் (JCIHK) என்ற அமைப்பு மூலம் நிறுவப் பட்டது.
ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கு ஏற்ற வகையில் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் அவரது புத்தொழில் தொடக்க நிறுவனத்தின் செயல் திறனுக்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.