TNPSC Thervupettagam

சர்வதேச நறுமணப் பொருள் மாநாடு 2019

February 6 , 2019 1990 days 758 0
  • சர்வதேச நறுமணப் பொருள் மாநாட்டின் நான்காவது பதிப்பு தெலுங்கானாவின் தலைநகரமும் முத்து நகரமுமான ஹைதராபாத்தில் நடத்தப்பட்டது.
  • இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் நறுமணப் பொருட்களில் 80 சதவிகிதத்திற்கு மேல் ஏற்றுமதி செய்யும் அகில இந்திய நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் மன்றத்தால் இம்மாநாடு நடத்தப்படுகின்றது.
  • இம்மாநாடு அனைத்து நறுமணப் பொருட்கள் சங்கம், அனைத்து வியாபார மையங்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், நறுமணப் பொருட்களை பயன்படுத்துவோர் மற்றும் விவசாயிகள் ஆகிய அனைவருக்கும் அவர்கள் கலந்துரையாடுவதற்கும் தொடர்பு கொள்வதற்கும் உகந்த ஒரு தளமாக கருதப்படுகின்றது.
  • 2019 ஆம் மாநாட்டிற்கான கருத்துரு “மாற்றங்களின் சவால்கள், மதிப்புச் சங்கிலியை மறுவரையறை செய்தல்” என்பதாகும்.
  • “மாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்புகள் மூலமாக தடைகளை சமாளித்தல்” எனும் கருத்துருவுடன் இம்மாநாட்டின் மூன்றாவது பதிப்பு ஜெய்ப்பூரில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்