இத்தினம் 2014 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.
இத்தினமானது பிஸ்கெக் பிரகடனத்தின் நிறைவு ஆண்டினைக் குறிக்கிறது.
பனிச்சிறுத்தையின் வளங்காப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வேண்டி இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 என்பது 12 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி, பனிச்சிறுத்தைகளின் வளங்காப்பு மீதான பிஸ்கெக் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு தினமாகும்.
பனிச் சிறுத்தையானது 12 நாடுகளில் காணப்படுகிறது.
அவையாவன இந்தியா, நேபாளம், பூடான், சீனா, மங்கோலியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், கசகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியனவாகும்.