இந்தத் தினமானது, உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோரின் சமூக மற்றும் பொருளாதார நிதர்சனங்கள் (உண்மை நிலவரங்கள்) குறித்த கவனத்தினை ஈர்க்கச் செய்வதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், அனைத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கையினை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஏற்றுக் கொண்டது.