TNPSC Thervupettagam

சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம்

April 15 , 2024 95 days 298 0
  • இந்திய நாட்டினைச் சேர்ந்த ஜக்ஜித் பவாடியா அதிக வாக்குகளைப் பெற்று சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2030 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு அவர் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளார்.
  • இந்திய  நாடானது பின்வரும் அமைப்புகளில் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது,
    • 2025-2029 ஆகிய காலக் கட்டத்திற்கான பெண்களின் நிலை குறித்த ஆணையம்;
    • 2025-2027 ஆகிய காலக் கட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியத்தின் நிர்வாக வாரியம்;
    • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் நிர்வாக வாரியம்;
    • 2025-2027 ஆகிய காலக் கட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பெருந் திட்டச் சேவைகளுக்கான அலுவலகம்
    • 2025-2027 ஆகிய காலக் கட்டத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் பாலினச் சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பு நிறுவனத்தின் நிர்வாக வாரியம் மற்றும்
    • 2025-2027 ஆகிய காலக் கட்டத்திற்கான உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக வாரியம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்