இமாச்சலப் பிரதேசத்தின் ராம்பூர் புஷாஹரில் நான்கு நாட்கள் நடைபெற்ற சர்வதேச லாவி கண்காட்சி நிறைவடைந்துள்ளது.
மூன்று நூற்றாண்டுகள் பழமையானது உள்பட, திபெத், சீனா மற்றும் பிற நாடுகளுடனான வர்த்தகத்திற்காகவும் இந்த கண்காட்சி மிகப்பெரிய அளவில் அறியப் படுகின்றது.
இந்தக் கண்காட்சியானது வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக ராம்பூர் புஷாஹரின் ராஜா கெஹரி சிங் என்பவரால் தொடங்கப்பட்டதாக நம்பப் படுகின்றது.
இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் திபெத் பிராந்தியத்தில் தோன்றிய, ஆபத்து நிலையில் உள்ள ஒரு குதிரை இனமான “சாமூர்த்தி குதிரைகளை” விற்பனை செய்வதும் வாங்குவதும் ஆகும்.
சாமூர்த்தி குதிரைகள் ‘குளிர் பாலைவனத்தின் கப்பல்’ என்றும் அழைக்கப் படுகின்றன.