TNPSC Thervupettagam
April 13 , 2021 1200 days 576 0
  • இராமநாதபுரம் வனச்சரகர் S. சதீஷிற்கு சர்வதேச வனப்பாதுகாவலர் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இவ்விருது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN - International Union for Conservation of Nature), பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் (WCPA - World Commission on Protected Areas), சர்வதேச வனச்சரகர் கூட்டமைப்பு, உலகளாவிய வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வனப் பாதுகாப்பு நட்பு நாடுகள் ஆகியவற்றால் ஒன்றிணைந்து அறிவிக்கப்படுகிறது.
  • இவ்விருதினைப் பெறும் 10 நபர்களுள் இவரும் ஒருவராவார்.
  • சதீஷ் உத்தரகாண்ட்டிலுள்ள இராஜாஜி தேசியப் பூங்காவை சேர்ந்த மகேந்திர கிரியுடனும், கம்போடியா, மியான்மர், ரஷ்யா, ஜார்ஜியா, ஸாம்பியா, மடகாஸ்கர், கோட்டிவார் (ஜவரி கோஸ்ட்) மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த எட்டு வனப் பாதுகாவலர்களுடன் இவ்விருதினைப் பகிர்ந்து கொள்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்