TNPSC Thervupettagam

சர்வதேச வனப் பாதுகாவலர் விருது

April 1 , 2021 1212 days 718 0
  • இராஜாஜி புலிகள் காப்பகத்தின் வனப் பாதுகாவலர் மகிந்தர் கிரி மதிப்புமிக்க சர்வதேச வனப் பாதுகாவலர் விருதினை வென்றுள்ளார்.
  • ஆசியாவிலேயே இந்த விருதைப் பெறும் ஒரே வனப் பாதுகாவலர் இவரே ஆவார்.
  • வனப் பாதுகாப்பிற்காக இவர் ஆற்றிய தொண்டிற்காக வேண்டி இந்த விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இவ்விருது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக ஆணையம் (WCPA) ஆகியவற்றால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இவ்விருது IUCN + WCPA, சர்வதேச வனப் பாதுகாவலர் கூட்டமைப்பு, உலகளாவிய வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வனப் பாதுகாப்பு நட்பு நாடுகள் ஆகியவற்றால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது.
  • இந்த விருது 2020 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த விருது உலகெங்கிலும் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பணி புரியும் வனப் பாதுகாவலர்கள் மேற்கொள்ளும் சாதாரணப் பணிகளை முன்னிலைப்படுத்தி அவற்றைப் பாராட்டும் நோக்கில் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்