இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்தின் மூலம் 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
1889 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு உலகளாவியப் பாராளுமன்ற அமைப்பான பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியத்தின் (IPU) உருவாக்கத்தையும் இந்தத் தினமானது அங்கீகரிக்கிறது.
பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிரந்தரப் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
மேலும் இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒன்றியம் மற்றும் இதில் உறுப்பினராக உள்ள பாராளுமன்றங்கள் இந்தத் தினத்தினை ‘நாடாளுமன்றப் பணியில் பொதுமக்களின் ஈடுபாடு’ என்ற கருத்துருவுடன் அனுசரிக்கின்றன.