"பிரிவினைவாதத்திற்காக" நியாயமற்ற முறையில் சீனாவில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் பல்கலைக் கழகத்தில் வெளிப்படையாகப் பேசிய முன்னாள் பொருளாதார பேராசிரியருக்கு 2014 இல் தண்டனை வழங்கப்பட்டது.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரான டேவிட் சசோலி என்பவர் உடனடியாக இல்ஹாம் டோடியை விடுவிக்குமாறு சீனாவை வலியுறுத்தியதுடன், சீனாவில் சிறுபான்மையினர் உரிமைகளை (முஸ்லிம்கள்) மதிக்க வேண்டும் என்றும் சீனாவிற்கு அழைப்பு விடுத்தார்.
உய்குர்கள்
உய்குர்கள் பெரும்பாலும் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் வாழும் ஒரு முஸ்லீம் இன சிறுபான்மையினர் ஆவர்.
அவர்கள் அங்குள்ள மக்கள்தொகையில் 45% என்ற அளவில் உள்ளனர்.
சீனாவின் தெற்கே உள்ள திபெத்தைப் போன்று சின்ஜியாங் அதிகாரப்பூர்வமாக சீனாவிற்குள் இருக்கும் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆனது ‘அதிகமான உய்குர்களை சிறையில் அடைத்தல்’ என்பது குறித்த ஒரு ஆவணம் சார்ந்த அறிக்கையை ஐ.நா குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
‘கைதிகள்’ எந்தக் குற்றச்சாட்டும் இன்றி காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உலக உய்குர் காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.