TNPSC Thervupettagam

சாகித்ய அகாடமி உறுப்பினர் பதவி

April 2 , 2022 843 days 553 0
  • எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாடமி தனது உறுப்பினர் பதவியை வழங்கியது.
  • இந்தியாவின் மிக உயரிய இலக்கிய கௌரவமான இது புகழ்பெற்ற சிறந்த இலக்கியத் தகுதியுடைய அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அகாடமி உறுப்பினர்களின் எண்ணிக்கை 21 ஆக மட்டுமே வரையறுக்கப் பட்டுள்ளது.
  • இந்திரா பார்த்தசாரதி பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.
  • இவர் 16 நாவல்கள், 10 நாடகங்கள் மற்றும் சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளின் தொகுப்புகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.
  • இவர் 1977 ஆம் ஆண்டில் குருதிப்புனல் என்ற தனது நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
  • சாகித்ய அகாடமி விருது மற்றும் சங்கீத நாடக அகாடமி விருது ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இவரே ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்