12 இளம் அறிவியலாளர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் பரிசை வழங்கி கௌரவிக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டிற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகள் ஒரு வருட தாமதத்திற்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் முதல் தலைமை இயக்குனர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் அவர்களின் நினைவாக இதற்குப் பட்நாகர் பரிசுகள் என்று பெயரிடப்பட்டது.
உயிரியல், வேதியியல், கணிதம், இயற்பியல், மருத்துவம், பொறியியல் மற்றும் புவி, வளிமண்டலம், கடல் மற்றும் கிரக அறிவியல் ஆகிய ஏழு அறிவியல் துறைகளில் இப்பரிசு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.