சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியரான ரஜ்னிஷ் குமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசை வென்றுள்ளார்.
மனித அறிவு மற்றும் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கும் நபர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த பரிசு வழங்கப்படுகிறது.
கிளாத்ரேட் ஹைட்ரேட்டுகளின் அணுக் கருவாக்கம் மற்றும் உருவாக்கம், திட ஹைட்ரேட்டுகளில் CO2 நீக்கம் மற்றும் கடல் சார் வாயு நிலை ஹைட்ரேட்டுகளில் இருந்து மீத்தேன் மீட்டெடுத்தல் ஆகியவற்றின் அடிப்படை புரிதலுக்கான அவரதுப் பங்களிப்புகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அவர் ஐக்கியப் பேரரசில் உள்ள அரசு வேதியியல் சங்கத்தின் [FRSC] உறுப்பினராகவும் உள்ளார்.
இந்த வருடாந்திர விருது ஆனது, 1985 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிச் சபையினால் நிறுவப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.