சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்த விருதுகள் இந்தியாவின் மிக உயர்ந்த பன்முக அறிவியல் விருதுகளாகும்.
இது ஒரு வருடாந்திர விருதாகும்.
இந்த விருதுகள் அறிவியல்சார் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி மன்றத்தினால் (Council of Scientific and Industrial Research - CSIR) வழங்கப் படுகின்றன.
இந்த விருதைப் பெறுபவர்களின் பெயர்கள் வழக்கமாக CSIRன் நிறுவன தினமான செப்டம்பர் 26 அன்று அதன் தலைமை இயக்குநரால் அறிவிக்கப் படுகின்றன.
இந்த விருது ஏழு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றது. அந்தப் பிரிவுகளாவன
இயற்பியல் அறிவியல்
வேதியியல் அறிவியல்
உயிரியல் அறிவியல்
மருத்துவ அறிவியல்
கணித அறிவியல்
பொறியியல் அறிவியல்
பூமி, வளிமண்டலம், பெருங்கடல் மற்றும் கிரக அறிவியல்.
CSIRன் முதலாவது தலைமை இயக்குநரும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முதலாவது தலைவருமான சாந்தி ஸ்வரூப் பட்னாகரின் (1894 - 1955) நினைவாக இந்த விருது வழங்கப்படுகின்றது.
இவருக்கு 1954 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.